எம்மைப்பற்றி

மாமனிதனும் புதிய மனிதனும்

எமது உரிமைகளுக்காகவும் நாங்கள் பிறந்து வளர்ந்து அள்ளி விளையாடிய மண்ணுக்காகவும் தாயகத்திற்காகவும் இறுதி மூச்சு வரை குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும் என்ற பேரவா என் மனதில் உள்ளது.

ஈழத் தமிழர்கள் தமது உரிமைகளை வெற்றி கொண்ட மாமனிதர்களாக இந்த உலகைச் சுற்றி வர வேண்டும் என்பதே இந்த 'புதிய மனிதனின்' அவாவும் விருப்பமும்.

ஈழத்தமிழர்கள் மலைபோல் நம்பியிருந்த போராட்டம் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தாததாலும், அரசியல் சாணக்கியமும் இராஜதந்திரமும் பிராந்திய அரசியல் கணிப்பீடுகளுமற்ற செயற்பாடுகளாலும், இராணுவ வலிமை பற்றிய அதீத நம்பிக்கையாலும், பிராந்திய அரசுகளின் நம்பிக்கைத் துரோகங்களாலும், எம்மவர்களின் காட்டிக்கொடுப்புக்களாலும் அழிக்கப்பட்டு இன்று ஈழத்தமிழினம் தனக்கென ஒரு தலைமைத்துவம் இல்லாது அரசியல் அனாதைகளாக, தோல்வி மனப்பான்மையுடன் ஒடுங்கி வாழும் இன்றைய சூழலில் எனது இனத்தின் உரிமைக்காகவும் மறுவாழ்வுக்காகவும் இயன்றவரை பாடுபட வேண்டும் என்ற எண்ணமே எனது அரசியல் சித்தாந்தமாகும்.

நான் ஒரு நடுநிலையான ஊடகவியலாளன் என்றோ மாமனிதன் ஒரு நடுநிலையான இணையதளம் என்றோ கூறமாட்டேன். நான் ஈழத்தமிழ் சமூகத்தின் சாதாரண ஒரு பிரதிநிதி மட்டுமே.

அன்புடன்
புதிய மனிதன்
ஆசிரியர், மாமனிதன்
31 ஐப்பசி 2010