13 March 2012
29 October 2011
நண்பர்களே,
எமது இணையத்தை உங்கள் இணையம் ஊடாக மக்களுக்கு அறிமுகம் செய்ய உதவுங்கள். உங்கள் இணையத்தில் ஒரு இணைப்பையும் ஏற்படுத்தினால் உதவியாக இருக்கும்.
http://maamanithan.blogspot.com/
நன்றி
மாமனிதன் இணையம்
எமது இணையத்தை உங்கள் இணையம் ஊடாக மக்களுக்கு அறிமுகம் செய்ய உதவுங்கள். உங்கள் இணையத்தில் ஒரு இணைப்பையும் ஏற்படுத்தினால் உதவியாக இருக்கும்.
http://maamanithan.blogspot.com/
நன்றி
மாமனிதன் இணையம்
03 December 2010
தமிழீழத்தின் தேசியக்கொடி எது? ஏன்??
புலிக்கொடியில் துப்பாக்கி தேவையா? துப்பாக்கியில் இருந்து அதிகாரம் பிறக்கிறது என்பது ஜனநாயக நாட்டுக்கு பொருந்துமா?
01 November 2010
மக்களவை என்ன செய்கிறது? என்ன செய்ய வேண்டும்? - தமிழீழவன்
கடும் போக்குடைய தமிழீழ தேசியவாதிகள் வட்டுக்கோட்டை தீர்மான தேர்தல் நடாத்தினார்கள். பின்னர் மக்களவைக்கான தேர்தல் பல நாடுகளிலும் நடைபெற்றது. உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் அடுத்த கட்டம் தொடர்பாக அவர்கள் குழம்பிய நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.
காரணம் நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கம். அதனால் ஏற்பட்ட ஒரு தடுமாற்றம். சரியான ஒரு ஆலோசனையை அவர்கள் பெறவில்லையோ எனத் தோன்றுகிறது.
புலிகளின் மென்மைப் போக்குடையோர்களின் உருவாக்கம்தான் நாடுகடந்த தமிழீழ அரசு. கடும் போக்குடையோரின் உருவாக்கம்தான் மக்களவை. இரண்டும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயற்பட வேண்டும். அதுவே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.
ஒருவரின் போராட்டம் தோல்வி அடையும் போது மற்றவர் தொடரலாம். ஒருவர் வழி தவறும் போது மற்றவரைப் பார்த்து திருந்தவும் அல்லது மக்களால் ஒதுக்கவும் முடியும். அதுதான் ஜனநாயகத்தின் வலிமை.
ஆகவே, பல நாடுகளிலும் தனித்தனியாகச் செயற்படும் மக்களவைகள் ஒன்று சேர வேண்டும். அவையும் நாடு கடந்த தமிழீழ அரசு போல ஒரு பலமான அமைப்பாக உருவாக வேண்டும். [போட்டி அமைப்பாக அல்ல.] இது எப்படிச் சாத்தியமாகும்? மிகவும் இலகுவானது.
சகல நாடுகளில் செயற்படும் மக்களவைகளும் ஒரு பிரிவினரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருவதாகத் தெரிகிறது. ஆகவே, அவற்றை ஒன்று சேர்ப்பது சிரமமானது அல்ல.
நாடு கடந்த தமிழீழ அரசு போல ஒரு சட்டப் பேரவையாக அது உருவாக்கப்படலாம். அதனை 'தமிழீழ மக்களவை' [People's Council of Tamil Eelam (PCTE)] என்றோ அல்லது 'தமிழீழ தேசிய சபை' அல்லது 'தமிழீழ தேசிய பேரவை' [National Council of Tamil Eelam (NCTE)] என்றோ பெயரிடலாம்.
அது பிரதமர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டிராமல் ஐக்கிய நாடுகள் சபை போல மக்களவையின் சகல நாட்டுப் பிரதிநிதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாக அமையலாம்.
பிரதமருக்குப் பதிலாக செயலாளர் நாயகம் பதவியும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல அமைச்சர் அல்லாது செயலாளர்கள் நியமிக்கப்படலாம்.
இது நாடு கடந்த தமிழீழ அரசுக்கு மாற்றீடாகவும் இருக்கும்; வித்தியாசமாகவும் இருக்கும். ஏன் மக்களவையினர் இதுபற்றி சிந்திக்கக்கூடாது.
நாடு கடந்த தமிழீழ அரசு தமது செயற்பாட்டை அமெரிக்காவை தளமாகக் கொண்டுதான் செயற்படப் போகிறது. அது இந்தியாவின் உதவியையும் எதிர்பார்க்கிறதாகத் தெரிகிறது. ஆனால், ஈழத் தமிழருக்கு இந்தியா ஒரு நட்பு நாடு அல்ல.
மக்களவை ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்திச் செயற்படலாம். சரியான சுயநலமில்லாத ஆலோசகர்களை முதலில் அவர்கள் அடையாளம் காண வேண்டும்.
புலிகளின் பெருமளவு வெளிநாட்டு செயற்பாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மக்களவையினர் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிரான செயற்பாட்டுக்கு தமது வளத்தை பயன்படுத்தாது இலங்கை அரசால் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட எமது விடுதலைப் போராட்டத்தை இராஜ தந்திர ரீதியாக வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதுவே மக்களின் எதிர்பார்ப்பு.
செய்வீர்களா போராளிகளே??
31 October 2010
தமிழீழம் என்பது என்ன? - தமிழீழவன்
'தமிழீழம்' என்றால் ஒரு நாடா? ஒரு தேசமா? ஒரு நாட்டின் பகுதியா? ஒரு பிரதேசமா? ஒரு அரசியல் கோரிக்கையா? ஒரு பிரிவினைவாத கோரிக்கையா? ஒரு பயங்கரவாத அமைப்பின் கோசமா? அல்லது அது தான் என்ன?
அது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். அது ஒரு நாடாக, ஒரு தேசமாக அல்லது ஒரு பிரதேசமாக எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், தமிழீழம் என்ற அடையாளத்தை அது இழந்துவிடக் கூடாது.
1972ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின் பிரபலமான 'தமிழீழக் கோரிக்கை' 1983ல் இருந்து ஆரம்பமான விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தினால் சர்வதேச ரீதியில் பிரபலமானது.
2009ல் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் தமிழீழம் என்பது தாயகத்தில் ஒலிக்காத ஒரு வார்த்தையாக மாறிவருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரி, ஏனைய தமிழ் கட்சிகளும் சரி, தமிழரின் தாயகம் தமிழீழம் என அடையாளப் படுத்தப்படுவதை தவிர்க்கக் கூடாது. அது எமது அரசியல் கோரிக்கையின் ஆதாரம். அடையாளம்.
இந்தியாவில் தமிழ்நாடு எப்படி தமிழர்களின் அடையாளமோ அதுபோல தமிழீழம் இலங்கையில் ஈழத்தமிழர்களின் அடையாளம். அது மாகாணசபையாக, மாநிலசபையாக இல்லை இல்லை மாவட்டசபையாக ஏன் பிரதேசசபையாக இருந்தாலும் கூட தமிழீழம் என அடையாளப் படுத்தல் வேண்டும்.
பலவீனமாக தாயகத்தில் உள்ள இன்றைய தமிழர் தலைமை இதற்கு தயாராக இருக்காது. அது அவர்களால் முடியாத ஒன்று. பலவீனமானவர்களிடமிருந்து பலமான கோரிக்கைகளை எதிர்பார்க்க முடியாது. அதனால் புலம் பெயர் ஈழத் தமிழரும் அவர்களின் அமைப்புக்களும் வெளிநாடுகளில் அதன் பயன்பாட்டை தொடர வேண்டும்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. அதனால், நாமும் நம்புவோம். காலம் ஒருநாள் மாறும். தமிழீழம் ஒருநாள் பிறக்கும் தனிநாடாக. அதுவரை அது எதிரிகளால் மட்டுமல்ல நம்மவர்களாலும் கூட கருக்கலைப்பு செய்யப்படாமல் காத்திட வேண்டும்.
அதன் உண்மையான பாதுகாவலர்கள் யார்? எதிரிகள் யார்?? துரோகிகள் யார்???
சிந்தியுங்கள் தமிழர்களே!
Subscribe to:
Posts (Atom)